பிள்ளைகளை தத்தெடுப்பதை இஸ்லாம் தடை செய்தது ஏன்?

அனாதைகளை ஆதரிக்குமாறு இஸ்லாம் ஊக்குவிப்பது மாத்திரமின்றி, தங்கள் சொந்த குழந்தைகளை நடத்துவது போல் அவர்களை நடத்துமாறும் அனாதை பாதுகாவலரை வலியுறுத்துகிறது. இருப்பினும், தந்தையின் அனந்தரச்சொத்தில் அவ்வநாதைக்குரிய பங்கை பாதுகாக்கவும், பரம்பரை கலப்பை தவிர்ப்பதற்காகவும் அநாதைகள் தங்கள் உண்மையான குடும்பத்தைக் கண்டறியும் உரிமை உண்டு.

தான் தத்தெடுக்கப்பட்டதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக அறிந்து கொண்ட மேற்கத்திய யுவதி தற்கொலை செய்த சம்பவம், தத்தெடுப்புச் சட்டங்களில் உள்ள முறை கேட்டுக்கான மிகப்பெரும் சான்றாக உள்ளது. சிறுவயது முதலே அவளுக்கு இதனைத் தெரிவித்திருந்தால், அவளுக்கு கருணை காட்டி, அவளுடைய சொந்த குடும்பத்தைத் தேடும் வாய்ப்பைக் பெற்றிருப்பாள்.

"ஆகவே நீர் அநாதைகளைக் கடிந்துகொள்ள வேண்டாம்''. (அல்ழுஹா: 9). تقدم

"நீங்கள் இம்மை மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக! அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல் முறையை மேற்கொள்வதே உத்தமமாகும். நீங்களும், அவர்களும் சேர்ந்து வாழ்வதில் (உணவு, உறைவிடம் போன்றவைகளுக்குக் கூட்டாகச் செலவு செய்வதில்) குற்றமேதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவர். தீமை செய்பவர்களையும் நன்மை செய்பவர்களையும் அல்லாஹ் நன்கு அறிந்திருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். ஆனால் அல்லாஹ் பேராற்றலுள்ளவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்”. (அல்பகரா : 220). تقدم

"(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறுங்கள்". (அந்நிஸா: 8). تقدم

PDF

Wait a moment

AI Chatbot
Offline