முதல் தவறு குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?

தடை செய்யப்பட்ட மரத்தின் கணியை சாப்பிட்டதின் காரணமாக மனித குலத் தந்தை ஆதத்தின் தவ்பாவை ஏற்றுக்கொண்டதன் மூலம் மனிதனுக்கு மிகப்பெரும் பாடத்தைக் கற்றுத்தருகிறான். அதுதான் மனித குலத்தின் இரட்சகன் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய முதல் மன்னிப்பாகும். ஒருவரின் பாவத்தை -குற்றத்தை- இன்னொருவர் சுமக்க மாட்டார் என்ற அடிப்படையில் கிறிஸ்துவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஆதமிடமிருந்து அனந்தரமாக பெற்ற பாவம் என்ற நம்பிக்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் அவரவர் பாவத்தையே சுமக்கிறார். இது இறைவன் எம்மீது செய்த கருணையாகும். அதாவது மனிதன் எவ்விதக்குற்றமும் பாவமுமின்றி தூய்மையாகவே பிறக்கிறான். அவன் பருவ வயதை அடைந்ததிலிருந்தே அவனின் செயலுக்கு வகைகூறுபவனாக மாறுகிறான்.

ஒரு மனிதன் அவன் செய்யாத குற்றத்திற்கு விசாரிக்கப்படவும் மாட்டான். அதே போல் இறைவிசுவாசம் மற்றும் நற்செயல் இன்றி ஒரு போதும் வெற்றியடையவும் முடியாது. அல்லாஹ் மனிதனுக்கு உயிரை -வாழ்க்கை- கொடுத்து, அவனை சோதிப்பதற்காகவும், பரீட்சிக்கவும் வேண்டி விருப்பத்தை- நாட்டத்தை வழங்கினான். எனவே அவனின் நடவடிக்கைகளுக்கு அவன் மாத்திரமே பொறுப்புக்கூறக் கூற வேண்டியவனாக உள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :

''எந்த ஒர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையை சுமக்காது, பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இரட்சகனிடமே உள்ளது. அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அஸ்ஸுமர்:7). تقدم

மேலும் பழைய ஏற்பாட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

"குழந்தைகளுக்காக பெற்றோர் கொல்லப்படமாட்டார்கள், பெற்றோர்களுக்காக குழந்தைகள் கொல்லப்படமாட்டார்கள், ஒவ்வொருவரும் அவரவர் பாவத்திற்காக -குற்றத்திற்காக- வே கொல்லப்படுவார்". (உபாகமம் : 24:16). تقدم

மன்னிப்பு நீதியுடன் முரண்படமாட்டாது. அதே போல் நீதியானது மன்னிப்பையும் கருணையையும் தடுத்திடவுமாட்டாது.

PDF

Wait a moment

AI Chatbot
Offline